Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம பிசி வைகோ -இரண்டு வாரத்திற்கு ஆஃப்லைன்

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (15:43 IST)
அரசியலில் செம பிசியாக வலம் வந்துகொண்டிருக்கும் வைகோ இன்னும் இரண்டு வாரத்திற்கு தொடர்பு எல்லைக்கு வெளியே செல்ல இருக்கிறார்.

ஆளும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தல், திருமா வளவனுடன் முட்டல்; மோதல்; கைகுலுக்கல், அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டு ஸ்டாலினை முதல்வராக்குதல் ஆகியவையே இப்போது தமிழ்நாடு மதிமுக பொதுச்செயலாளர் முன் உள்ள அளப்பறியப் பணிகள். இந்த வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வரும் அவர், இன்னும் இரண்டு வாரத்திற்கு யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருக்கிறார். எதற்காகத் தெரியுமா?

ஆண்டுதோறும் தான் எடுத்துக்கொள்ளும் கேரள ஆயுர்வேத சிகிச்சைக்காகத்தான். ஆம் இன்னும் ஓரிரு நாளில் சிகிச்சைகளுக்காக கேரளா செல்ல இருக்கிறார். அதற்காக தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள் யாவற்றையும் ஒத்தி வைத்துள்ளார். கேரளாவில் சிகிச்சை முடித்து  விட்டு புத்தாண்டு கொண்டாடிவிட்டு புது வைகோ வாக அடுத்த ஆண்டு தமிழக மக்களை சந்திக்க இருக்கிறார், வைகோ.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments