Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

Siva
வெள்ளி, 23 மே 2025 (11:22 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தென்மேற்கு பருவமழை விரைவில் தீவிரமாகும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மே 26 வரை கடல் பிரதேசங்களில் பரபரப்பான நிலை நிலவுவதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், அவர்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
 
மே 21 முதல் 26 வரை, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையிலுள்ள பகுதிகளில் 11 முதல் 20 செ.மீ. வரை மற்றும் மஞ்சள் எச்சரிக்கையிலுள்ள பகுதிகளில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பொதுமக்கள் எல்லா முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments