Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

Mahendran
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (16:43 IST)
சபரிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து, பம்பை ஆற்றில் அதிகமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திரிவேணி என்ற பகுதியை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பம்பை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திரிவேணி பகுதியை தவிர மற்ற பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகமானால் திரிவேணி பகுதியிலும் குளிக்க தடை விதிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பதால், ஐயப்ப பக்தர்கள் மிகவும் கவனமாக யாத்திரை செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக இரவு நேர பயணங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதியடையாமல், சன்னிதானத்திற்கு நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments