Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

Siva
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:52 IST)
சபரிமலையில் கனமழை பெய்ததன் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், அதன் தாக்கம் சபரிமலையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பம்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. நவம்பர் 30ஆம் தேதி முதல் சபரிமலையில் விட்டு விட்டு சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வரும் நிலையில், மலையேறும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும், அருகிலிருந்த கடைகளில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மழை காரணமாக பாதையில் சறுக்கல் ஏற்பட்டதால் பக்தர்கள் மெதுவாகவே ஏற முடிந்தது என்றும் இதன் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக தெரிகிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் சபரிமலை பகுதியில் மஞ்சள் அலர்ட் வெளியிட்டிருந்தது.

இதனால் சபரிமலை, பம்பா, நிலக்கல் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக தமிழக பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாகவும், மழை முடிந்த பின்பு அதிக பக்தர்கள் வரக்கூடும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments