Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எச்சரிக்கையை வானிலை அறிவிப்பு போல நினைக்கிறார்கள்! – மத்திய அரசு வேதனை!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (08:26 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நீடிக்கும் நிலையில் மக்கள் கொரோனா எச்சரிக்கையை அலட்சியம் காட்டுவதாக மத்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடந்த சில மாதங்கள் முன்னதாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் இரண்டாம் அலை பாதிப்புகள் தற்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளன. எனினும் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மாஸ்க் அணியாமல் சுற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் “கொரோனா மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கையை மக்கள் ஏதோ வானிலை அறிக்கை சொல்வதை போல எடுத்துக் கொள்கிறார்கள். எச்சரிக்கையை மக்கள் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments