வெறுப்பு பிரசாரம்: கூகுள் மற்றும் ஃபேஸ்புக் CEO -களுக்கு இந்தியா கூட்டணி கடிதம்!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:21 IST)
அடுத்தாண்டு நமது நாட்டில்  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி ஒரு சில கட்சிகளுடன் இணைந்து  மூன்றாவது அணி அமைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை உள்ளடக்கிய  இந்தியா என்ற கூட்டணி  கூகுள் மற்றும் ஃபேஸ்புக் சிஇஓக்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், இந்தியாவில் ஃபேஸ்புக், யூடியூப் வாட்ஸ் ஆப் ஆகியவரை நடுநிலையுடன் செயல்படுவதை உறுதி செய்யும்படி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மெட்டா தலைவர்  மார்க் ஜூகர்பெர்க் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வாஸிங்டன் போஸ்ட் நாளிதழ் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் குறித்த ஆயுவுக்கட்டுரையைச் சுட்டிக்கட்டி   நடுநிலையுடன் செயல்படுவதை உறுதிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments