Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் 50 கோடி வாங்கினேனா? – கடன் வாங்க சென்ற டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (10:26 IST)
தனது டீக்கடை தொடர்பாக கடன் வாங்க வங்கிக்கு சென்ற நபரை 50 கோடி ரூபாய் கட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் டீக்கடைக்கு கூட்டம் குறைவாக வருவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார் ராஜ்குமார். இதனால் வங்கியில் கடன் வாங்கி கடையை மேம்படுத்த முடிவு செய்துள்ளார்.

தற்போது சிறு, குறு தொழில்களுக்கு வங்கிகளில் கடன் அளித்து வருவதால் சிறிய அளவில் கடன் தொகை பெறுவதற்காக வங்கியை அணுகியுள்ளார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள் ஏற்கனவே 50 கோடி ரூபாய் கடன் பெற்று கட்டாமல் உள்ள நிலையில் புதிய கடனை எப்படி செலுத்துவீர்கள் என கேட்டுள்ளனர். இதனால் ராஜ்குமார் அதிர்ச்சியைடைந்துள்ளார். மேலும் 50 கோடி ரூபாய் கடன் வாங்கும் அளவிற்கு தன்னிடம் சொத்து மதிப்பு கூட எதுவுமில்லை என்று கூறியுள்ள அவர் யாரோ பெற்ற கடன் தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கலாம் என கூறி உரிய விசாரணை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிய அளவிலாவது கடன் கிடைக்காதா என சென்றவருக்கு 50 கோடி கடன் இருப்பதாக தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments