Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியின் பிறப்புறுப்பில் நாணயத்தை நுழைத்து பலாத்காரம் செய்த இளைஞன்!

சிறுமியின் பிறப்புறுப்பில் நாணயத்தை நுழைத்து பலாத்காரம் செய்த இளைஞன்!

சிறுமியின் பிறப்புறுப்பில் நாணயத்தை நுழைத்து பலாத்காரம் செய்த இளைஞன்!
, வெள்ளி, 26 மே 2017 (11:54 IST)
ஹரியானா மாநிலத்தில் 7 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் நாயணம் உள்ளிட்ட சில பொருட்களை நுழைத்தும், பலாத்காரம் செய்தும் வந்த 21 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
ஹரியானா மாநிலம் சண்டிகரில் ஒரு தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால் பெரும்பாலான நேரங்களில் அந்த குழந்தை வீட்டில் தனியாகத்தான் இருக்கும்.
 
இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி அந்த குழந்தை வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவன் அங்கு சென்றுள்ளான். அப்போது அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான் அந்த இளைஞன்.
 
வீட்டில் யாரும் இல்லாததால் அந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கொடுத்து பலாத்காரம் செய்துள்ளான் அந்த இளைஞன். மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் தீக்குச்சிகள், நாணயங்கள், பஞ்சு போன்றவற்றை நுழைத்து கொடுமை செய்துள்ளான்.
 
இந்த கொடுமைகளை பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது பெற்றோர்கள் வந்த பின்னர் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் அந்த இளைஞரை உடனடியாக கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னவாகும் என்று யோசித்தது உண்டா?