Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா பலி 42 லட்சமா? – அமெரிக்க பத்திரிக்கைக்கு ஹர்ஷவர்தன் கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (09:09 IST)
இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் 42 லட்சம் என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதுமான தினசரி மற்றும் மொத்த கொரோனா பலி மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.94 கோடியாகவும், பலி எண்ணிக்கை 3.6 லட்சமாகவும் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் பலி எண்ணிக்கை 42 லட்சமாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் “எந்த வித ஆதாரமும் இன்றி இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments