Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா பலி 42 லட்சமா? – அமெரிக்க பத்திரிக்கைக்கு ஹர்ஷவர்தன் கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (09:09 IST)
இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் 42 லட்சம் என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதுமான தினசரி மற்றும் மொத்த கொரோனா பலி மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.94 கோடியாகவும், பலி எண்ணிக்கை 3.6 லட்சமாகவும் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் பலி எண்ணிக்கை 42 லட்சமாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் “எந்த வித ஆதாரமும் இன்றி இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ரேக் அப் செய்த காதலி! கடத்திச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய முன்னாள் காதலன்!

திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் 40 அடி உயரத்தில் வேல்.. பக்தர்கள் பரவசம்..!

இன்று முதல் முதல்வர் மருந்தகங்கள்.. 1000 இடங்களில் திறந்து வைக்கும் விழா..!

ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments