குருத்வார் மேல கைய வெச்சா அவ்ளோதான்! – சீறிய ஹர்பஜன் சிங்!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (10:34 IST)
பாகிஸ்தானில் உள்ள பிரபல சீக்கிய குருத்வாரை இடிப்பதாக இஸ்லாமிய அமைப்பு ஒன்று பேசியுள்ளதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது சீக்கியர்களின் புனித தலமான நானா சாஹிப் குருத்வார் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது. முகமது ஹசன் என்ற பாகிஸ்தான் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபர் சில கும்பல்களோடு சேர்ந்து நேற்று குருத்வாரை தாக்கியுள்ளார். சீக்கியர்களுக்கு எதிரான வாசகங்களை ஏந்தி வந்த அந்த கும்பல் குருத்வாரை இடித்து விட்டு அங்கு மசூதி கட்டப்போவதாக சூளுரைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வீடியோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ”கடவுள் ஒருவரே.. அவரது பெயரால் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தாதீர்கள். முதலில் மற்றவர்களை மதிக்கும் நல்ல மனிதராக இருங்கள். முகமது ஹசன் சீக்கியர்களின் குருத்வாராவை இடிப்பதாக வெளிப்படையாக சொல்கிறார். பிரதமர் இம்ரான்கான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

நடிகர் உபேந்திரா மனைவி செல்போன் ஹேக்.. லட்சக்கணக்கில் சைபர் குற்றமா?

மருத்துவமனை காத்திருப்பு பகுதியில் உல்லாசம்.. காதல் ஜோடியின் அநாகரீக செயல்..!

திருமண மேடையில் மணமகனுக்கு கத்திக்குத்து: குற்றவாளியை 2 கிமீ துரத்திய ட்ரான் கேமரா!

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மை தான்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments