Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பரவி வரும் 'எச்3என்2 'வகை வைரத் தொற்று- ஐ.எம்.ஏ எச்சரிக்கை

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (18:28 IST)
இந்தியா முழுவதும் 3 மாதங்களாக ஏ வகைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுபற்றி ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, ''இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 மாதங்களாக எச்3என்2 வகையைச் சேர்ந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், மக்கள் பலர் இருமல் , காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற இன்புளூயன்சாவைவிட இந்த வகை இன்புளூயன்சாவினால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே இந்திய மருத்துவக் கூட்டமைப்பு இதற்கான   சில அறிவுறுத்தல்களை மக்களுக்கு கூறியுள்ளது. அதில்,   தற்போது பரவி வரும் இருமல், காய்ச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகியவை தென்பட்டால், பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நுண்ணுயிர் கொல்லி வகை மருத்துகளை எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

மேலும், இது பொதுவாக, 5 முதல் 7 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், 15 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட மக்களுக்கு, காற்று மாசுபாட்டினாலும் கூட பரவி வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments