Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தேர்தல்: 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (08:47 IST)
குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று காலை சற்றுமுன்னர் வாக்குப்பதிவு தொடங்கியது

இன்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிச.18ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி நம்பிக்கை.தெரிவித்துள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஜாம்நகர் ஊரக தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், ஜகாடியா, காண்டேவி தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேலும் குஜராத் தேர்தலில் முதல் முறையாக அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வாக்களித்தது தொடர்பான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.

குஜராத் தேர்தல் களத்தில் முதல் கட்ட தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 24,689 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  இன்று மட்டும் 2.12 கோடி பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments