Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு முட்டை பிடிக்காவிட்டால் கடையை மூட சொல்வதா? – குஜராத் நீதிமன்றம் காட்டம்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (16:27 IST)
அகமதாபாத்தில் வெளிப்படையாக இறைச்சி கடைகள் செயல்பட விதித்த கட்டுப்பாடுகளுக்கு குஜராத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படி இறைச்சி, முட்டை உணவுகளை கண்முன்னே சமைக்கும் உணவகங்களால் சைவ உணவு உண்பவர்கள் மனம் புண்படுவதாக கூறி வெளிப்படையாக இறைச்சிகளை சமைத்து விற்க மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “மக்கள் முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என அதிகாரத்தில் உள்ள கட்சி நினைத்தால் கடைகளை தூக்கி தூர எறிந்து விடுவீர்களா? மக்களிடையே இப்படி பாகுபாடு காட்டுவது முறையா?” என மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments