Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்டு ஆலையை டாட்டா எடுக்க ஒப்புதல்!

Webdunia
திங்கள், 30 மே 2022 (09:47 IST)
ஃபோர்டு இந்தியாவின் சனந்தில் உள்ள ஆலையை கையகப்படுத்த குஜராத் அரசு டாடா மோட்டார்ஸுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

 
கடந்த ஆண்டு, ஃபோர்டு நிறுவனம் ஓலா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்த உற்பத்திக்காகவோ அல்லது இரு தொழிற்சாலைகளின் விற்பனைக்காகவோ பேச்சுவார்த்தை நடத்தியது. இது வேலை செய்யாததால் ஆலை மூடல் அறிவிப்புக்கு வழிவகுத்தது.
 
ஃபோர்டு இந்தியாவின் ஆலைகளை கையகப்படுத்துவதற்கு டாடா குழுமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஃபோர்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு இது நடந்தது.
 
ஆம், ஃபோர்டு இந்தியாவின் சனந்தில் உள்ள ஆலையை கையகப்படுத்த குஜராத் அரசு டாடா மோட்டார்ஸுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான தடையில்லா சான்றிதழை மாநில அமைச்சரவை வழங்கியுள்ளது. மேலும், ஃபோர்டு இந்தியாவுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து அனுபவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டாடா மோட்டார்ஸ் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துடன் தொழிலாளர் மற்றும் நிதி விவகாரங்கள் உட்பட ஆலை தொடர்பான சிக்கல்களை சரி செய்த பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments