Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலை புறக்கணிக்கும் 18 கிராமங்கள்: குஜராத்தில் பாஜகவுக்கு சிக்கல்?

Gujarat
, திங்கள், 14 நவம்பர் 2022 (14:44 IST)
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு நாட்கள் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் திடீரென 18 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக  தீவிர முயற்சி செய்து வருகிறது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி என்ற தொகுதிக்கு உட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள அஞ்செலி என்ற ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த கோரி நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் ஆனால் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு மத்தியில் உள்ள பாஜக அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர் 
 
இந்த 18 கிராம மக்களும் இதுநாள்வரை பாஜகவுக்கு ஓட்டளித்து வந்தவர்கள் என்பதால் பாஜகவுக்கு இந்த தொகுதியில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகனை நேரில் சந்தித்த நளினி.. கண்ணீர் மல்க நலம் விசாரித்தார்