மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (07:27 IST)
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்:
 
மாற்றுத்திறனாளிகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி, அவர்களுக்கு அரசு பணிகளை கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
 
40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு அரசு பணிகளை கண்டறிவது அவசியம். இதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் குழு அமைத்து, அவர்களுக்கான பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த குழுவில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.
 
குழுவின் மூலம் கண்டறியப்பட்ட பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறன்களை மதிப்பீடு செய்து, பார்வையற்றோர், செவித் திறன் குறைந்தோர், அறிவுசார் குறைபாடுகள் கொண்டோர் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களுக்கு நேரடி நியமனம் வழங்க வேண்டும். அதன் பின்னர், காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்ப வேண்டும்.
 
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இட ஒதுக்கீடு கொள்கைகள் இருந்து விலக்கு பெறுவதற்கான முறையை பின்பற்ற வேண்டும். மேலும், இந்த நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.
 
இதுதொடர்பாக, கடந்த 2021-2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments