Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 வயது சிறுமியை சீரழித்த 63 வயது வாட்ச் மேன்: குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த கொடுமை!

4 வயது சிறுமியை சீரழித்த 63 வயது வாட்ச் மேன்: குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த கொடுமை!

4 வயது சிறுமியை சீரழித்த 63 வயது வாட்ச் மேன்: குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த கொடுமை!
, திங்கள், 7 நவம்பர் 2016 (16:38 IST)
கேரளாவில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணி புரிந்த 63 வயது வாட்ச் மேன் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
கொச்சி புறநகர் பகுதியான திரிக்ககாராவில் தனியார் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது. பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு விட்டு செல்வார்கள். இங்கு குழந்தையை பராமரிப்பதற்காக குறிப்பிட்ட தொகையை பெற்றோர்களிடம் வசூலிப்பார்கள்.
 
இந்நிலையில் இங்கு பணி புரிந்து வந்த வாட்ச் மேன் ஒருவர் அங்கு ஒப்படைக்கப்பட்ட 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வெளியூர் சென்ற பெற்றோர் அந்த குழந்தையை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
 
வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு அந்த இடத்தில் வலிப்பதாக கூற பதறிய சிறுமியின் தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிறுமியை பரிசோதித்த மருத்துவரிடம் சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
 
இதனை கேட்ட சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாட்ச் மேன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைக்கில் வந்த வாலிபர்களை பிடித்து இழுத்த போலீசார் ; வாலிபர் பலி : சென்னையில் பரபரப்பு