Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாலி கட்டும் நேரத்தில் மணமகனை கொலை செய்த பெண் வீட்டார்

தாலி கட்டும் நேரத்தில் மணமகனை கொலை செய்த பெண் வீட்டார்

தாலி கட்டும் நேரத்தில் மணமகனை கொலை செய்த பெண் வீட்டார்
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (13:29 IST)
சற்று நேரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில், அந்த திருமணத்தில் விருப்பமில்லாத பெண் வீட்டார், மணமகனை கொலை செய்த விவகாரம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அனில்(24). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
 
ஆனால், அதற்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி, அந்த பெண்ணை திருமணம் செய்வதில் அனில் உறுதியாக இருந்தார். எனவே தனது பெற்றோர் மற்றும் உறவினர்களின் துணையுடன் அப்பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த அவர், புறநகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்வது என முடிவெடுத்தார். 
 
அந்த பெண்ணும், வீட்டிலிருந்து கிளம்பி அந்த கோவிலுக்கு வந்து விட்டார். கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், இந்த தகவலை எப்படியோ பெண் விட்டார் தெரிந்து கொண்டனர். 
 
உடனே அங்கு வந்த அவர்கள் மணமகனையும், அவரது உறவினர்களையும் கடுமையாக தாக்கினர். அந்த சண்டையில், மணமகனுக்கு கத்தி குத்தி விழுந்தது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரின் தந்தையும் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தார். 
 
மணமகளை, அந்த கும்பல் அங்கிருந்து இழுத்து சென்று விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிரியை நினைத்து ஏங்கவில்லை : கருணாநிதி ஓபன் டாக்