Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு: தாமாக முன்வந்து விசாரணை செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு

Mahendran
செவ்வாய், 30 ஜூலை 2024 (14:44 IST)
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த  உடல்கள் ஆறுகளில் மிதந்து வருவதாகவும் அந்த உடல்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் 500 வீடுகளில் குடியிருந்த சுமார் 1000 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது .

ந்த நிலையில் நிலச்சரிவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவு விடப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலை கட்டுமான திட்ட விவரங்களை உடனடியாக தர வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது. இந்த விவகாரங்களை தயார் செய்து விரைவில் வழங்குமாறு கேரளா அரசு வழக்கறிஞருக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments