Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற ஊ.ம. தலைவர் [வீடியோ]

Advertiesment
ஊராட்சி மன்ற தலைவர்
, சனி, 28 மே 2016 (16:29 IST)
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு, ஊராட்சி மன்ற தலைவர் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
 

 
சந்திரஹாசா (30) என்பவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கேஸ்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் 32 வயதுமிக்க பெண் ஊழியருக்கு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளார்.
 
ஆனாலும் அந்த பெண் பெரும் முயற்சி செய்து அவரிடம் இருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் வேலைநேரம் முடிந்த பின்னர் மாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது. பின்னர், இந்த சம்பவம் அந்த பெண் ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
நடந்த சம்பவங்கள் அனைத்தும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
 
வீடியோ இங்கே:
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றோடு முடிகிறது அக்னி நட்சத்திரம்