Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அரசு தடை

Sinoj
திங்கள், 11 மார்ச் 2024 (14:24 IST)
ரோடோமைன் பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக அரசுதடை விதித்துள்ளது.

பஞ்சு மிட்டாயில் நிறமேற்ற பயன்படுத்தும் கெமிக்கலில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. 
 
முதலில் புதுச்சேரியிலும், பிறகு சென்னையிலும் பஞ்சு மிட்டாய்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு பின் தமிழகம் முழுவதும் பிங்க் நிறத்திலான கலர் பஞ்சு மிட்டாயை விற்க தடை விதிக்கப்பட்டது.
 
மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிங்க் பஞ்சு மிட்டாய் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்று உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.
 
இந்த நிலையில், ரோடோமைன் பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக அரசுதடை விதித்துள்ளது.
 
புற்று நோய், கல்லீரல் தொடர்பான  நோய்களுக்கு வித்திடும் ரோடோமைன் பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடைவித்து கர்நாடக சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.
 
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் இத்தடையை மீறி விற்பனைசெய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments