Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (16:57 IST)
புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மா நிலத்தில்  அரசுத்துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதல்வர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர்.

இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரியய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில்  காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை  என 2 மணி  நேரம் பணிச்சலுகை வழங்கப்படும்.

மாதம்தோறும் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், இந்த விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.  மேலும், அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தால்,  நிர்வாகத்தின் நலலத்தின் பொருட்டு,  ஒரே நேரத்தில் இந்தச் சலுகை பெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments