Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளாக 2 ஆயிரம் ருபாய் அச்சடிக்கப்படவில்லை! – மத்திய அமைச்சர் தகவல்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (08:33 IST)
பணமதிப்பு இழப்பிற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த 3 ஆண்டுகளாக அச்சடிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட நிலையில் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பயன்பாடு மக்களிடம் குறைந்து வருவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ”கடந்த 2018ம் ஆண்டு கணக்குபடி இந்தியாவில் மொத்தம் 336 கோடியே 30 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் கடந்த மார்ச் மாத நிலவரப்படி 223 கோடியே 30 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மக்களின் தேவையை பொறுத்தே ரூபாய் நோட்டுகளை எவ்வளவு அச்சடிப்பது என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது. அதனால் கடந்த 2018-2019 நிதியாண்டிலிருந்தே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments