Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ்.. அரசு பேருந்து ஓட்டுனர் கைது..!

Siva
வெள்ளி, 3 மே 2024 (15:09 IST)
பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில் திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா என்பவரின் கார் அந்த பேருந்துக்கு பின் வந்துள்ளது

அந்த  நிலையில் மேயர் காருக்கு வழிவிடாமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் அந்த பேருந்தை முந்தி சென்ற கார் பேருந்தை மறித்து உள்ளது. அப்போது மேயர் ஆர்யா ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் மேயர் ஆர்யாவை பழி வாங்குவதற்காக ஓட்டுநர் அவரது செல்போனுக்கு ஆபாச மெசேஜ் மட்டும் மிரட்டல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மேயர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்பு!

ஓடும் ரயிலில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை அடித்தே கொலை செய்த பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments