Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை!? – தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவால் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (11:00 IST)
எதிர்வரும் 14ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் எதிர்வரும் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் காற்று மாசு உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க, விற்க தடை விதித்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி நவம்பர் 10 முதல் 30 வரை டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய அரசின் அதிக காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களிலும் பட்டாசு வெடிக்க, விற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பசுமை பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments