Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை!? – தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவால் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (11:00 IST)
எதிர்வரும் 14ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் எதிர்வரும் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் காற்று மாசு உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க, விற்க தடை விதித்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி நவம்பர் 10 முதல் 30 வரை டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய அரசின் அதிக காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களிலும் பட்டாசு வெடிக்க, விற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பசுமை பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments