Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவிகளின் ஆடையை அவிழ்க்க கூறிய தலைமை ஆசிரியர் கைதா?

Advertiesment
, வெள்ளி, 31 மார்ச் 2017 (21:46 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முசாஃபார் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே மாணவிகளின் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 


இதுகுறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கல்வி அதிகாரி சந்திரகேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பல பெற்றோர்கள் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் செய்துள்ளதால் எந்த நேரத்திலும் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உபி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,.

இந்த நிலையில் இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்றும், பள்ளி ஊழியர்களிடம் தான் கண்டிப்புடன் இருப்பதால் பள்ளி ஊழியர்கள் தனக்கெதிராக செய்யும் சதியே இது என்றும் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியபோது, 'இந்த சம்பவம் உண்மைதான் என்றும், ஆடையை அவிழ்க்காவிட்டால் பிரம்பால் அடிப்பதாக மிரட்டியதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை 'என்றும் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் வரை நீட்டிப்பு