Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேகிங் செய்த மருத்துவ மாணவிகள்; ரூ.25ஆயிரம் அபராதம் விதித்த கல்லூரி

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2017 (19:11 IST)
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பாங்கா மருத்துவ கல்லூரியில் ரேகிங் செய்த 54 மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 

 
பீகார் மாநிலத்தில் தர்பாங்கா பகுதியில் மருத்துவ கல்லூரி மற்றும் மருவத்துவமனை உள்ளது. இதில் புதிதாக முதலாம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் ரெகிங் தொடர்பான புகார் அளித்தார். அவரை அங்கு படிக்கும் மூத்த மாணவிகள் கொடுமைபடுத்தி, அடித்து துன்புறுத்தி, மனதளவில் பாதிக்கும் அளவுக்கு ரேகிங் செய்வதாக கூறியுள்ளார்.
 
இதுகுறித்து மருத்துவ கவுன்சிலிலும் புகார் பதிவு செய்தார். இதையடுத்து அவரது புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகார் குறித்து விசாரணை நடத்தியபோது மூத்த மாணவிகள் ரேகிங் செய்தது தெரியவந்தது. கல்லூரி முதல்வர் ரேகிங் செய்த 54 மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து ரேகிங்கில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments