Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளியில் சமையல் செய்யும் மாணவிகள்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (12:51 IST)
ஆக்ராவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிகள் மதிய உணவு சமைத்துள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களை வேலை செய்ய சொல்லி துன்புறுத்தும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சில ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை வகுப்பறையை சுத்தம் செய்ய சொல்வது, கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்தப்படுத்துவது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஆக்ராவில் உள்ள ரன்காட்டா அரசு தொடக்கப்பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மதிய உணவு சமைக்க ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமைக்கும் போது பள்ளியில் பயிலும் ஒரு மாணவி காய் வெட்டுகிறார் மற்றொருவர் சப்பாத்தி உருட்டுகிறார். இதனை வீடியோ எடுத்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். அதனை பார்த்த தொடக்க கல்வி மாணவர்களை சமைக்க வைத்தது தவறென்றும் இது குறித்த விசாரணைக்கு பிறகு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பெற்றோர்கள், தங்களைப்போல் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத் தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால் பள்ளியிலோ பிள்ளைகளை சில ஆசிரியர்கள் சித்ரவதை செய்து வருகிறார்கள். இதுபோல் செய்யும் ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் ஆதங்கத்துடன் தங்களின் கோபத்தை வெளிபடுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments