Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளூவேல் விபரீதம் ; ஆற்றில் குதிக்க சென்ற மாணவி மீட்பு

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (15:38 IST)
புளூவேல் விளையாட்டி ஆடியதன் மூலம் ஆற்றங்கரையில் சென்று  தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஜோத்பூர் மாணவியை போலீசார் காப்பாற்றியுள்ளனர்.


 

 
புளூவேல் விளையாட்டை விளையாடி தனது உயிரை இளைஞர்கள் பலர் மாய்த்துக்கொள்ளும் சம்பவம் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு இந்தியாவில் பரவி, தமிழ் நாட்டிலும் பரவியுள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
 
அதை நிரூபிக்கும் வகையில் மதுரையில் ஒரு இளைஞர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், பாண்டிச்சேரியில் ஒரு பெண் வங்கி ஊழியரை போலீசார் சமீபத்தில் மீட்டனர். 
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்த விளையாட்டை ஆடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர். நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய அவர் ஆற்றங்கரையோரம் நின்று கொண்டு தற்கொலைக்கு முயன்ற போது போலீசார் அவரை மீட்டனர். அவரது கையில் திமிங்கிலத்தின் வரைபடத்தை அவர் வரைந்து வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு தகுந்த மனநல ஆலோசனைகளை அளிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments