Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கி முனையில் 21 வயது பெண் துப்பாக்கி முனையில் கூட்டு பலாத்காரம்

துப்பாக்கி முனையில் 21 வயது பெண் துப்பாக்கி முனையில் கூட்டு பலாத்காரம்
, வியாழன், 23 ஜூன் 2016 (17:30 IST)
பீகார் மாநிலம் மோதிகரி எனும் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவரை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார். இதுபற்றி நியாயம் கேட்க, அந்த பெண்ணும் அவரது பெற்றோர்களும், அந்த வாலிபர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
 
இதனால் கோபமடைந்த அந்த வாலிபரின் குடும்பத்தாரும், உறவினர்களும் அந்த பெண்ணை இழுத்துச் சென்று அடித்து உதைத்தனர். மேலும், அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரது பெண் உறுப்பும் சிதைக்கப்பட்டது. கடைசியில், அவரை ஆடையில்லாமல் சாலையில் வீசினர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இந்த விவகாரம் அந்த கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை வட இந்திய மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறுவைச் சிகிச்சை செய்த சிறுவன் ’கோமா’ - மருத்துவமனை மீது நடவடிக்கை