Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெற்றி பொட்டில் குண்டு காயம், எரிந்த நிலையில் சிறுமியின் சடலம்: பீகாரில் பகீர்!

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (13:19 IST)
பீகாரில் 16 வயது சிறுமி ஒருவர் நெற்றில் குண்டு காயத்துடன், எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹைதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அந்த அதிர்ச்சி சம்பவத்தின் துயரம் மறைவதற்குள் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறியது. பெண் டாக்டர் எரித்துக் கொல்லப்பட்ட பகுதிக்கு சிறிது தொலைவிலேயே மற்றொரு பெண்ணும் எரித்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த துயரத்தோடு சேர்த்து மேலும் ஒரு பெரும் துயரமாக பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த குக்தா கிராமத்தில், 16 வயது சிறுமியின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். 
 
அந்த சிறுமியின் நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளதும் கண்டுபிடிகப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டாரா என தெரியாத நிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிறுமியின் சடலம் கிடைத்த இடத்தையும் சோதனையிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி கொண்டாட மறுத்த இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்! - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

மருத்துவக் கல்வியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது.. தீர்ப்பை எதிர்த்து போராட்டம்..!

ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்: உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments