Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு எதிரொலி: 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்தில் தங்கியிருந்த ஜெர்மனி பயணி

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (19:13 IST)
55 நாட்களாக டெல்லி விமான நிலையத்தில் தங்கியிருந்த ஜெர்மனி பயணி
இந்தியா வழியாக துபாய் செல்ல சென்று கொண்டிருந்த ஜெர்மன் பயணி ஒருவர் இந்திய தலைநகர் டெல்லியில் துபாய் விமானத்திற்காக காத்திருந்த நிலையில் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கடந்த 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்தில் அந்த பயணி சிக்கித் தவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
கடந்த மார்ச் மாதம் 18ம் தேதியில் ஜெர்மன் நாட்டில் இருந்து துபாய் புறப்பட்ட எட்கார்ட் ஜீபார்ட் என்பவர் டெல்லியில் இறங்கி பின்னர் அங்கிருந்து துபாய் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து ஜெர்மன் பயணியான எட்கார்ட் ஜீபார்ட் அவர்களிடம் இந்தியா விசா இல்லாததால் இந்தியாவுக்குள் நுழைய முடியாமலும், தான் செல்லவேண்டிய துபாய்க்கும் செல்ல முடியாமல் டெல்லி விமான நிலையத்தில் கடந்த 55 நாட்களாக தங்கியுள்ளார். 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெர்மனிக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்ற நிலையில் அந்த விமானத்தில் அவர் தனது தாய் நாடு சென்றார். 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்திலேயே ஜெர்மன் பயணி ஒருவர் தங்கி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments