Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி போர்க்களத்தில் தான் பேச்சுவார்த்தை: கவுதம் காம்பீர்

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (20:45 IST)
பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்களை இந்தியா இழந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசும், இந்திய ராணுவமும் தயாராகி வருகிறது. இந்த தாக்குதலால் இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் கடுங்கோபத்தில் இருப்பதால் உடனடியாக ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், 'இனியும் பிரிவினைவாதிகளுடனும் பாகிஸ்தானுடனும் பேசுவோம். ஆனால் இந்த முறை பேச்சுவார்த்தை மேஜையில் இருக்காது, போர்க்களத்தில்தான் இருக்க வேண்டும். பொறுத்தது போதும். பொங்கி எழவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
கவுதம் காம்பீரின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான  லைக்ஸ்களும் ஷேர்களும் கமெண்டுக்களும் குவிந்து வருகிறது. இதில் இருந்தே மக்கள் எந்த அளவுக்கு ஆத்திரத்தில் உள்ளனர் என்பது தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments