Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (15:19 IST)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கி வரும் நிலையில் தற்போது பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் கிரைண்டர் அளிக்கும் திட்டம் ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியன் ஆயில் நிறுவனம் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் பயனாளிகள் மூன்று மாதங்களில் சுமார் 90 லட்சம் இலவச சிலிண்டர்களை பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே இன்று காலை சமையல் சிலிண்டரின் விலை ரூபாய் 65 குறைத்த நிலையில் தற்போது இலவசமாகவே சிலிண்டர் கிடைப்பது என்ற தகவல் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று முதல் இந்த இலவச சிலிண்டர்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த சிலிண்டர்களை பெறும் மக்கள் வழக்கம்போல் சிலிண்டர் நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் அதன்பின் அவர்களது வங்கிக்கணக்கில் அவர் செலுத்திய பணம் முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments