Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மிஷினுக்கு பதிலாக பாஸ்புக் மிஷினை திருடி சென்ற கோமாளி திருடர்கள்

ஏடிஎம் மிஷினுக்கு பதிலாக பாஸ்புக் மிஷினை திருடி சென்ற கோமாளி திருடர்கள்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (16:53 IST)
ஏடிஎம் மிஷின் என நினைத்து பாஸ்புக் அச்சடிக்கும் மிஷினை தூக்கிச் சென்ற கோமாளி திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.



அசாமில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. சம்பவத்தன்று இரவு நான்கு கொள்ளையர்கள் சேர்ந்து ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி  கௌகாத்தி எனும் இடத்தில் உள்ள பினோவாநகர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு காரில் சென்றுள்ளனர்.

அங்கு இருந்த பாஸ்புக் அச்சடிக்கும் மிஷினை, ஏ.டி.எம் மிஷின் என நினைத்து அவர்கள் நால்வரும் தூக்கி தங்களின் காருக்குள் போட்டு கடத்திச் சென்றனர்.

அந்த பகுதி வழியாக ரோந்து வந்த போலீசார், அவர்களின் கார் எண்ணை பார்த்து சந்தேகம் அடைந்து, அவர்களின் பின்னாலேயே சென்று அவர்களை மடக்கி பிடித்துள்ளனர். அதன் பின்னர்தான் காரின் உள்ளே அந்த மிஷின் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் என்ன வேடிக்கை என்றால், போலீசாரிடம் பிடிபட்ட பின்புதான், அந்த எந்திரம் ஏ.டி.எம் இல்லை என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments