Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”காந்தியின் போராட்டம் ஒரு நாடகம்”.. பாஜக எம்.பி. சர்ச்சை

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (13:45 IST)
மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகப் போராட்டம் என பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சையாக பேசியுள்ளார்.
Mahatma Gandhi

பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம், இது போன்ற நபர்களை எப்படி மகாத்மா என்று அழைக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

மேலும், “பிரிட்டிஷ் ஆதரவுடன் தான் அவருடைய போராட்டங்கள் நடைபெற்றது, அவர்கள் ஒரு முறை கூட போலீஸாரால் தாக்கப்பட்டதில்லை” எனவும் கூறியுள்ளார்.
BJP MP Anantkumar Hegde

முன்னதாக பாஜக எம்.பி.யான பிரக்யா சிங் தாகூர், “கோட்ஷே ஒரு தேச பக்தர்” என கூறியது சர்ச்சையை கிளப்பியது. பின்பு அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார். இவரை தொடர்ந்து தற்போது அதே பாஜகவை சேர்ந்த எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments