Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

Mahendran
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (13:05 IST)
இந்த ஆண்டு இறுதிக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்தார். மேலும், சந்திரயான் 4 திட்டத்தின் பொறியியல் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் 'ஸ்பேஸ் எக்ஸ்போ 2024' நிகழ்வை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சந்திரயான் 4 பற்றிய தகவல்களை பகிர்ந்த அவர், “சந்திரயான் 4 திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அப்டேட்கள் வழங்கப்படும்.

தற்போது, சந்திரயான் 4 பொறியியல் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. சந்திரயான் 3 திட்டத்தில், சந்திரயானங்கள் மெதுவாக நிலவில் தரையிறங்கின. இனி அடுத்த இலக்கு, நிலாவில் இருந்து திரும்பி கொண்டு வருவது. இதற்காக, 5 தனித்துப் பிரிவுகளை விண்கலத்தில் இணைக்க வேண்டும், ஆனால், நமது ஏவுதளம் இதற்கு பரிமாணம் இல்லாததால், இரண்டு பகுதிகளாக பிரித்து ஏவ வேண்டும். இது மிகவும் சவாலான பணியாக இருக்கும்.

ககன்யான் திட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சோம்நாத், ககன்யான் விண்கலம் ஏவத் தயாராக இருப்பதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் அதை ஏவ முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், நான்கு வீரர்களை புவியின் 400 கிலோமீட்டர் தாழ்வான பாதையில் அனுப்பி, அவர்கள் 3 நாட்கள் பயணம் செய்து மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இந்நிலையில், ககன்யான் விண்கலத்தை அடுத்தாண்டு ஏவ திட்டம் இருந்தபோதும், தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

மருத்துவக் கழிவுகள் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது.? சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள் - ராமதாஸ்..!

தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷணா வாரியம்: அமைச்சர் பவன்கல்யாண் அறிவிப்பு..!

விமானம் கிளம்பியபோது திடீரென கதவை திறக்க முயன்ற பயணி: சென்னையில் பரபரப்பு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு செல்வப்பெருந்தகை காரணமா? ராகுல் காந்திக்கு கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments