Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் அந்த கடவுள் பண்ற வேல; என்ன பண்றது? – அப்செட்டான நிதியமைச்சர்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:16 IST)
நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ”இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடவுளின் செயல். இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழல் உருவாகியுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் இந்த நிதி ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments