Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் அந்த கடவுள் பண்ற வேல; என்ன பண்றது? – அப்செட்டான நிதியமைச்சர்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:16 IST)
நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ”இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடவுளின் செயல். இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழல் உருவாகியுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் இந்த நிதி ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments