Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம்: புதிய உத்தரவு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (07:49 IST)
4 வயது குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம்: புதிய உத்தரவு!
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது என்பது தெரிந்ததே இருப்பினும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் குழந்தைகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறித்த தெளிவான உத்தரவு இல்லை 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நான்கு வயது குழந்தைகள் முதல் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நான்கு வயது குழந்தைகள் முதல் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்த அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து குழந்தைகளுக்கு ஹெல்மெட் வாங்க பெற்றோர்கள் ஹெல்மெட் கடைகளில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் பாதுகாப்பை கருதி தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments