மீண்டும் மீண்டும் ரயில் விபத்து.. சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து!

Siva
புதன், 13 நவம்பர் 2024 (09:06 IST)
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று சரக்கு ரயில் ஒன்றிய தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பெத்தபள்ளி என்ற பகுதியில் சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அந்த வழியாக செல்லும் 10 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு தாது ஏற்று சென்ற சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் அடிக்கடி ரயில்கள் தடம் புரண்டு வருவதை அடுத்து, அனைத்து தண்டவாளங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்றும் ரயில்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments