Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மீண்டும் ரயில் விபத்து.. சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து!

Siva
புதன், 13 நவம்பர் 2024 (09:06 IST)
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று சரக்கு ரயில் ஒன்றிய தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பெத்தபள்ளி என்ற பகுதியில் சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அந்த வழியாக செல்லும் 10 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு தாது ஏற்று சென்ற சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் அடிக்கடி ரயில்கள் தடம் புரண்டு வருவதை அடுத்து, அனைத்து தண்டவாளங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்றும் ரயில்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments