Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

Advertiesment
சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்:  4 மாவோயிஸ்டுகள்,  1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

Siva

, ஞாயிறு, 5 ஜனவரி 2025 (11:26 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் நான்கு மாவோயிஸ்டுகள்   கொல்லப்பட்டதாகவும், மாவோயிஸ்டுகள் சுட்டதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயன்பூர் மற்றும் அதையொட்டிய  மாவட்டங்களில் நேற்று திடீரென என்கவுண்டர் சம்பவம் நடந்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

சண்டை நிறுத்தத்திற்கு பின்னர் நான்கு மாவோயிஸ்டுகள் உடல்கள், ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் எஸ் எல் ஆர் ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

என்கவுண்டரை தொடர்ந்து அந்த பகுதியில் தப்பியோடிய மாவோயிஸ்டுகள் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் சிலர் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த என்கவுண்டர் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!