Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை! – மீண்டும் விவசாய அமைப்புகள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (08:42 IST)
வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றபோது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விவசாய அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது. சட்டங்களை திரும்ப பெற்றபோது விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட சில உத்தரவாதங்களையும் மத்திய அரசு அளித்தது.

ஆனால் போராட்டத்தை கைவிட்டு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகியும் மத்திய அரசு வாக்குறுதிகளை செயல்படுத்தாததால் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 21ம் தேதி நாடு தழுவிய முழு போராட்டம் நடத்த உள்ளதாகவும், ஏப்ரல் 11 முதல் 17 வரை குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் அளிக்க கோரும் வாரத்தை கடைபிடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்.. கட்சியின் பெயரும் அறிவிப்பு..!

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments