Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (08:19 IST)
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக முக்கிய பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தயாக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் ராஜ்யசபா எம்பியுமான ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
அயோத்தி ராமர் கோயில் வழக்கில் இறுதி தீர்ப்பு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தான் வழங்கி இருந்தார் என்பதும் இன்று அயோத்தி ராமர் கோவிலில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி சென்செக்ஸ் நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அன்புமணிக்கு இவ்ளோ செல்வாக்கா? கூப்பிட்டதும் குவிந்த கூட்டம்! காத்து வாங்கும் தைலாபுரம்?

நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த பரிந்துரை! நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் நன்றி!

வண்டி வண்டியாக பணத்தை கொட்டுவார்கள்.. அது எல்லாமே கொள்ளையடித்த பணம்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments