Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (16:32 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தின்  அமைந்துள்ள ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில், ஐந்து கைதிகளுக்கு எச்ஐவி நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
 
இது குறித்து சிறையின் மருத்துவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது பாதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் தங்கள் உடலில் பச்சைக் குத்தியதாகவும், ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு எச்ஐவி நோய் பரவியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, எச்ஐவி பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறப்பு உணவு மற்றும் மருந்து வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் பேருக்கும் அதிகமாக அடைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் ஏற்கனவே ஒன்பது பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு மேலும் பரபரப்பு உருவாகியுள்ளது.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments