Publish Date: Tue, 27 Jul 2021 (20:41 IST)
Updated Date: Tue, 27 Jul 2021 (20:48 IST)
பகலில் மீன் வியாபாரம் செய்து கொண்டு இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மாமன் மைத்துனர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் என்ற பகுதியில் மாமன் மைத்துனர் ஆகிய இருவர் பகலில் மீன் வியாபாரம் செய்து வந்தனர். இதனை அடுத்து இரவில் அவர்கள் வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்ததாகவும் கூறப்பட்டது. மீன் வியாபாரம் செய்த மாமன் மைத்துனர் ஆகிய இருவரும் செல்வ செழிப்புடன் இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் அவர்கள் புதிய வீடு கட்டுதல் தங்க நகைகளை வாங்கி அணிந்துக் கொள்ளுதல் ஆகிய ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டதை அடுத்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது
இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது பகலில் மீன் வியாபாரம் செய்து அவர்கள் இருவரும் இரவில் வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இரண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றது இதனை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது