Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு...தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (16:45 IST)
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நஎற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்  தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று அதிகாலையில், திடீரென்று துப்பாக்கிசூடு நடைபெற்றது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகம் எழுந்த நிலையில், சக வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சாகர் பின்னெ, சந்தோஷ் நகரல் மற்றும் கமலேஷ்(24), யோகேஷ்குமார்(24) ஆகிய  4 ராணுவ வீரர்கள் இறந்துகிடந்தனர்.

இவர்களில், கமலேஷ்(24), யோகேஷ்குமார்(24) ஆகியோர் முறையே சேலம் , தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் காவல் பணியில் இருந்த ஒருவர் தலையில் துப்பாக்கிச்ச்சூடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸில் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments