Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு...தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (16:45 IST)
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நஎற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்  தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று அதிகாலையில், திடீரென்று துப்பாக்கிசூடு நடைபெற்றது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகம் எழுந்த நிலையில், சக வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சாகர் பின்னெ, சந்தோஷ் நகரல் மற்றும் கமலேஷ்(24), யோகேஷ்குமார்(24) ஆகிய  4 ராணுவ வீரர்கள் இறந்துகிடந்தனர்.

இவர்களில், கமலேஷ்(24), யோகேஷ்குமார்(24) ஆகியோர் முறையே சேலம் , தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் காவல் பணியில் இருந்த ஒருவர் தலையில் துப்பாக்கிச்ச்சூடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸில் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments