திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள லட்டு தயாரிக்கும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கும் பணி தடைபட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
தீயணைப்பு பணியில் 3 வாகனங்கள் ஈடுபட்டன, அப்போது லட்டு தயாரிக்கும் பொருட்களின் மீது தீயணைப்பு ரசாயணங்கள் கலந்ததாக கூறப்படுகிறது. லட்டு தயாரிக்கும் பொருளில் ரசாயணம் கலந்ததால் லட்டு தயாரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 20 லட்சம் மதிப்புள்ள லட்டு தயாரிக்கும் மூலபொருட்கள் வீணாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.