Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டெல்லியில் தீவிபத்து – தீயணைப்பு படை போராட்டம் !

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (10:39 IST)
டெல்லியில் அமைச்சக அலுவலகங்கள் கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி சி.ஜி.ஓ. வளாகத்தில் உள்ள தீன் தயாள் அந்தியோதயா பவன் என்ற 11 மாடிக்கட்டிடம் உள்ளது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அமைச்சகம் உள்ளிட்ட சில அமைச்சகங்களின் அலுவலகங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.

இந்தக் கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென்று தீப்பற்றியுள்ளது. இந்தத் தீ வேகமாக அந்த தளம் முழுவதும் பரவி உள்ளது. இதையறிந்து அங்கு உடனே வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த தீக்கானக் காரணம் இதுவரை வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களுக்கும் முன்னர் டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இதுபோன்ற தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments