Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 12 நோயாளிகள் பலி!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (07:43 IST)
கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 12 நோயாளிகள் பலி!
கொரோனா வைரஸ் பாதிப்பாலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் பலர் மாண்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 12 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் நாசிக் மாவட்டத்தில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை செய்ய மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments