Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்வா தந்த நிர்மலா சீதாராமன்:பட்ஜெட்டிற்கான முன்னேற்பாடு

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (20:30 IST)
பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடத்தப்படும் அல்வா வழங்கும் நிகழ்ச்சி, மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் இன்று நடந்தது.

2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5 ஆம் தேதியன்று பாராளுமனறத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கை அச்சிட துவங்கும் முன், நிதியமைச்சகத்தில் அல்வா வழங்கும் விழா நடத்தப்படும். ஒரு நல்ல விஷயம் துவங்கும் முன் இனிப்பு வழங்கி துவக்குவது இந்திய கலாச்சாரம் என்ற முறையில், இவ்வாறு அல்வா வழங்கும் விழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர், பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் அல்வா வழங்குவார். அந்த வகையில் நிர்மலா சீதாராமன் பணியாளர் அனைவருக்கும் அல்வா வழங்கினார்.

மேலும் 100 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments